Friday, April 6, 2012
"பாரதம் முன்னேறாததற்கு ஆட்சியாளர்களின் தாழ்வு மனப்பான்மையே காரணம்" சுதேசி பாத யாத்திரை நிறைவில் கோவிந்தாச்சார்யா பேச்சு
யாத்திரையின் ஒருங்கிணைப்பாளர் இளங்குமார் சம்பத் வரவேற்றார். சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் மாநகர அமைப்பாளர் வானமாமலை தொகுத்து வழங்கினார். பாத யாத்திரைக்கு தலைமைத் தாங்கிய சுதேசி விழிப்புணர்வு இயக்க மாநில அமைப்புச் செயலாளர் இராம.நம்பி நாராயணன் யாத்திரை பற்றி விளக்கினார். அவருடன் யாத்திரையில் பங்குகொண்ட 5 பேரை அறிமுகம் செய்து வைத்தார். மேலும் அவர் பேசுகையில், "சென்னையில் ஒரு நிகழ்ச்சி முடிந்து சுதேசி செயல் வீரர்கள் பேசிக் கொண்டிரும் போது இந்த யாத்திரை பற்றி யோசனை வந்தது. பிறகு எங்களது மாநிலக் குழுவில் இதுகுறித்து பேசி முடிவெடுத்தோம். யாத்திரை குறித்து குருமூர்த்திஜி யோசனை கூறும் போது யாத்திரை என்பது மக்களுக்கு நாம் எதாவது சொல்வது அல்ல, மாறாக அவர்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்வதே முக்கியம் என்றார். அந்த யோசனையை நாங்கள் கடைப்பிடித்தோம். 11 ஊர்களில் மக்களோடு ஒன்றாக உட்கார்ந்து அவர்களோடு உரையாடினோம். பெரும்பாலான வணிகர்கள் ஆதரவு தெரிவித்தார்கள். அவர்களோடு விவசாயிகள், வழக்கறிஞர்கள் என்று பவேறு பிரிவினர்களும் பங்கேற்றார்கள். இந்தியாவில் தறி நெய்பவர்கள் அதிகமாக உள்ள சோமனூரில் ஆண்களை தறியில் உட்கார வைத்தார்கள்; பெண்கள் படித்தால் குடும்பத்துக்கு நல்லது என்று அவர்களை பட்டபடிப்பு படிக்க வைத்தார்கள். அதனால் ஆண்களுக்கு பெண் கிடைப்பது தட்டுப்பாடாக உள்ளது. இது போன்ற பல தகவல்களை யாத்திரையில் சேகரித்தோம். யாத்திரைக்கு மக்கள் தந்த வரவேற்பு எங்களுக்கு உற்சாகம் ஏற்படுத்துகிறது" என்று பேசினார்.
வாழ்த்துரை வழங்கிய தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் செயலாளர் கே.மோகன். "இப்போது சில்லறை வணிகம் குறித்து வந்துள்ள சட்டம் இது ஜனநாய நாடா? என்ற கேள்வியை எழுப்புகிறது. பழ வியாபாரம் செய்யும் சாதாரண பெண்மணி கூட லைன்சென்ஸ் வாங்க வேண்டும் என்பது அபாயக்கரமானது. வணிகர்களை மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரையும் இந்த யாத்திரை இணைத்துள்ளது. இது ஒரு முன்னோடி யாத்திரை" என்று புகழாரம் சூட்டினார்.
சிறப்புரையாற்றிய தேசிய சுயமரியாதை இயக்கத்தின் தலைவர் கே.என்.கோவிந்தாச்சார்யா, தனது உரையில்,
"பல்வேறு நாடுகளில் பணியாற்றி விட்டு நமது தேச விடுதலைக்காக போராடுவதற்காக மகாத்மா காந்தி பாரதம் வந்த போது, அவரது குரு கோபால கிருஷ்ண கோகலே நாடு முழுவதும் யாத்திரை வர சொன்னார். அதன் மூலம் இந்த நாட்டு மக்களிடம் இருந்து கற்று கொள்ள முடியும் என்றார். அதனால் தான் காந்தி மிகபெரிய தலைவர் ஆனார்.
இந்த நாட்டில் உள்ள ஆறு லட்சம் கிராமங்களில் 90 கோடி மக்கள் வசிக்கிறார்கள். 9000 நகரங்களில் வெறும் 30 கோடி மக்கள் தான் வசிக்கிறார்கள். 45 கோடி மக்கள் கிராமங்களை மையமாக வைத்து வாழ்கிறார்கள். இங்கு வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னால் பிரேசில் நாட்டை சார்ந்தவர் ஒருவரை சந்தித்தேன். அவர் உத்தர பிரதேசமும், பிரேசிலும் ஒன்றாக இருப்பதாக கூறினார். அதற்கு நான் சொன்னேன், மக்கள் தொகை, சாலைகள், நிலப்பரப்பு போன்ற சில ஒன்றாக இருக்கலாம்; அனால் மக்களில் சிந்தனைகள் வேறாக தான் இருக்கும். இங்கு நதியை 'கங்கா மாதா' என்று தொழுகிறார்கள்; ஆனால் அவர்களுக்கு அது வெறும் தண்ணீர் தான். அங்கு கிளப்புகள் இருக்கின்றன. ஆனால் அங்கிருப்பவர்களும் நம் நாட்டில் இருக்கும் நிர்வாண சந்நியாசிகளும் ஒன்றா? இந்த நாட்டை கூகிள் தேடுதளம் மூலமாக பார்த்து அறிய முடியாது. யாத்திரை மூலமாகவே அறிய முடியும். மற்றயவர்களை பார்த்து நாம் காப்பி அடிக்க முடியாது.
உலகத்தில் 206 நாடுகள் உள்ளன. ஆனால் ஆறில் ஒரு பங்கு மக்கள் தொகை நம்மிடம் தான் உள்ளது. சீனாவில் மட்டும் தான் அவ்வளவு ஜனத்தொகை உள்ளது. அமெரிக்கா உட்பட 7 நாடுகளில் 10 கோடிக்கு மேல் 30 கோடி வரை ஜனத்தொகை; 46 நாடுகளில் 1 கோடிக்கு மேல் 10 கோடி வரை ஜனத்தொகை. மற்ற நாடுகள் எல்லாம் அதற்கு கீழே தான். நம் நாட்டில் குருடர்கள் மட்டும் 90 லட்சம பேர். இந்த நிலையில் நாம் மற்றவர்களை பார்த்து காப்பி அடித்தால் யானைக்கும் சுண்டெலிக்கும் முடிச்சு போடுவதே. நாம் நம் வழியில் போவது தான் சரிப்பட்டு வரும். இங்கிலாந்துக்கும் நமக்கும் இருக்கும் வாழ்க்கை முறைகள் வேறு. அதை எப்படி காப்பி செய்ய முடியும்.
உலகத்தில் இரண்டு சதவீத நிலப்பரப்பு கூட நம்மிடம் இல்லை. ஆனால் 60 சதவீத பறவைகள் நம் நாட்டில் தான் உள்ளன. இங்கிலாந்தில் குளிர் அதிகம். அதனால் காலுக்கு சாக்ஸ் போடுகிறார்கள். நமக்கு சூரியனின் அருள் அதிகம். அதனால் வெப்பம் அதிகம். அவர்களுக்கு சாப்பிட மாட்டுக்கறி தேவை. நமக்கு மாடு கோமாதா. அதனால் நமது முறையே நமக்கு சரியாக வரும்.
200 வருடங்களுக்கு முன்பு வரை பாரதம் தான் உலகத்தின் பணக்கார நாடாக இருந்தது. எனவே நமக்கு உலக நாடுகளுக்கு வழிகாட்டும் நம்பிக்கை வேண்டும். ஆனால் நமது ஆட்சியாளர்களாக இதுவரை இருந்தவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை தான் உள்ளது. இது தான் நமது பிரச்சனைகளுக்கு காரணம். எனவே முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் நம்பிக்கையுடன் நம் நாட்டை முன்னேற்றி உலகத்துக்கு வழிகாட்டும் நாடாக மாற்றுவோம்". இவ்வாறு கோவிந்தாச்சார்யா பேசினார்.
அடுத்து உரையாற்றிய சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் அகில பாரத இணை அமைப்பாளரும், பிரபல பத்திரிகையாளருமான எஸ்.குருமூர்த்தி பேசுகையில்,
"சமுதாயத்தின் மூலம் பெறுகின்ற படிப்பினையை எந்த நூலகத்திலும், பத்திரிக்கைகளையும் படித்து தெரிந்து கொள்ள முடியாது. ஆதி சங்கரர் நாடு முழுவதும் யாத்திரை போனது அத்வைதத்தை பரப்புவதற்காக அல்ல.நாடு மக்க்களிடம் இருந்து தெரிந்துக் கொள்வதற்காக தான். உப்பு சத்தியாகிரகம் தொடங்கிய பொது காந்திஜிக்கு புத்தி பேதலித்து விட்டதாக சில தலைவர்கள் கூட சொன்னார்கள். அகமதாபாத்தில் இருந்து 15 மைல் கடந்து ஒரு கிராமத்துக்கு இரவு 10.30 மணிக்கு பிறகு தான் யாத்திரை வந்தது. அந்த நேரத்தில் உடன் வந்த 150 பேருக்கும் உணவு தயாரிக்க சொன்னார் காந்திஜி. மக்களும் தயாரித்து தந்தார்கள். யாத்திரை தொடங்கும் போது 15 பேர் தான் அவருடன் வந்தார்கள். முடியும் போது வந்தவர்கள் ஒன்றரை லட்சம் பேர். அத்தனை பேருக்கும் உணவு தயாரித்தது சாதாரண மக்கள் தான். மக்களின் உணர்வை தெரிந்துக் கொண்டதாலேயே காந்தி மாபெரும் தலைவர் ஆனார்.
எனக்கு சிறிய அளவில் யாத்திரை போன அனுபவம் உண்டு. அது பாத யாத்திரை அல்ல. 1993-ல் உலகமயமாக்கலின் போது நாட்டில் உள்ள 42 தொழிற்கூடங்களுக்கு குஜராத் முதல் தூத்துக்குடி வரை சென்றோம். சுமார் நான்கு வருடங்கள் அந்த இடங்களுக்கு போன பிறகு எங்களுக்கு வந்த தெளிவுக்கு பின்னர் நாங்கள் சொன்னது அப்படியே நடந்தது. நம் நாட்டுக்கு அந்நிய முதலீடு பெரிய அளவில் கிடைக்காது என்றோம். எட்டு சதவீத அந்நிய முதலீட்டை எதிர்பார்த்தனர். ஆனால் கடந்த 18 வருடங்களில் வந்த அந்நிய முதலீடு வெறும் 1.2% தான். சேமிப்பு 23% -இல் இருந்து 37%-மாக உயர்ந்தது. காரணம் நமது குடும்பங்கள் தான்.
அப்போது திருப்பூருக்கும் சென்றோம். அங்கு உள்ள முதலாளிகள் அங்கு உள்ள குறுகிய சாலைகளில் டி.வி.எஸ். வண்டியில் தான் பயணிக்கிறார்கள். அறுபது சதவீத ஏற்றுமதியாளர்கள் வெறும் எட்டாம் வகுப்புக்கும் கீழே படித்தவர்கள். ஏழு சதவீதம் பேர் மட்டுமே பட்டதாரிகள்.
குஜராத் மாநிலம் மோர்விக்கும் சென்றோம். அவர்கள் பல இயற்கை சீற்றங்களுக்கு பிறகும் நிமிர்ந்து நிற்கிறார்கள். குஜராத் மாநிலம் சூரத் 20 வருடங்களுக்கு முன்னால் சுற்று வட்டார கிராமங்களின் மக்கள் செய்த கழிவுகளால் சுத்தமின்றி கிடந்தது. அந்த சுற்று வட்டாரத்தினர் நகை செய்யும் வித்தையை கற்றுக் கொண்டனர். இன்று ஒவ்வொரு கிராமமும் ஒரு தொழிற் கூடமாக காட்சி அளிக்கிறது. உலகத்தில் உள்ள வைர உற்பத்திகளில் மூன்றில் இரண்டு பங்கு அங்கு தான் நடக்கிறது.
2001- ஆம் ஆண்டு உலக பொருளாதார வரலாறு எழுதப்பட்டது. அதில் பாரத நாடு தான் 1750 வரை பெரிய முன்னேறிய நாடாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளனர். 1800 வரை இன்றுள்ள பல வளர்ந்த நாடுகள் கீழ் நிலையில் தான் இருந்தன. அந்த நிலையில் நாம் இருந்ததற்கு எந்த பயிற்சி நிலையமும் காரணம் அல்ல. சமுதாயமே காரணம். இதை சமூக மூலதனம் என்று மேலை நாடுகள் இப்போது சொல்கின்றன.
நமக்கு மட்டுமல்லாமல் பல நாடுகளுக்கும் கண்கவர் நாடாக அமெரிக்கா இருந்தது. ஆனால் குடும்ப சீரழிவுகளின் காரணமாக அங்கு பொருளாதாரம் வீழ்ச்சி பெற்று வருகிறது. இப்போது அவர்கள் கடனில் இருந்து மீள 104 ட்ரில்லியன் டாலர்கள் தேவை.
கடந்த 20 வருட பொருளாதார ஆய்வில் நாங்கள் தெரிந்துக் கொண்ட உண்மை, நமது பொருளாதாரத்துக்கும், அரசாங்கத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பது தான். காரணம் அதை நாங்கள் புரிந்துக் கொண்டது பத்திரிக்கையை பார்த்து அல்ல. மக்களை பார்த்து தான்" என்று எஸ்.குருமூர்த்தி பேசினார்.
யாத்திரையின் மாநகர ஒருங்கிணைப்பாளர் சுந்தர் நன்றி கூறினார்.
ஆர்.எஸ்.எஸ். வடதமிழக அமைப்பாளர் பக்தவத்சலன், வடதமிழக இணை செயலாளர் எஸ்.சாம்பமூர்த்தி, சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் தமிழக - கேரளா அமைப்பு செயலாளர் பிஜு உட்பட ஏராளமானோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
Monday, April 2, 2012
குறுக்கு பாதை - சிறுகதை
Sunday, December 18, 2011
நூல் விமர்சனம் - சில்லறை வர்த்தகத்தை சீரழிக்கும் அந்நிய நேரடி முதலீடு

நூல் மதிப்புரை
நூல்: சில்லறை வர்த்தகத்தை சீரழிக்கும் அந்நிய நேரடி முதலீடு
நூலாசிரியர்கள்: எஸ்.குருமூர்த்தி, சேகர் ஸ்வாமி
வெளியீடு: சுதேசி விழிப்புணர்வு இயக்கம், தமிழ்நாடு
கே 75, 14- வது தெரு, அண்ணாநகர் கிழக்கு, சென்னை - 600 102.
தொடர்புக்கு : 9443140930
விலை: ரூபாய் 10 /- மட்டும்
சில்லறை வர்த்தகத்தில் 51% நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிப்பதை மத்திய காங்கிரஸ் அரசு தற்போதைக்கு ஒத்தி வைத்துள்ளது. இந்த நிலையில் சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் தமிழ்நாடு கிளை இந்த புத்தகத்தை வெளியிட்டுள்ளது பொருத்தமானது. திரு.எஸ்.குருமூர்த்தி அவர்களும், திரு.சேகர் ஸ்வாமி அவர்களும் இந்த பிரச்சனை பற்றி நன்கு ஆராய்ந்து பத்திரிக்கைகளில் எழுதிய கட்டுரைகள் மற்றும் எஸ்.குருமூர்த்தி அவர்களின் ஒரு பேச்சின் தொகுப்பே இந்த புத்தகம்.
திரு.எஸ்.குருமூர்த்தி அவர்களின் கட்டுரைகளும், பேச்சும் ஏற்கனவே படித்து, ரசித்தது தான் என்றாலும் புத்தகத்தின் வடிவில் பார்க்கும் போது இன்னும் சுவை கூடவே செய்கிறது. நம் நாட்டின் பெரும்பாலான மக்கள் (சுமார் 4 கோடி குடும்பங்கள்) ஏற்கனவே சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள போது, அந்நிய நிறுவனங்களின் கையில் சில்லறை வர்த்தகம் சிக்கினால் என்ன ஆகும் என்பதை தெளிவாக விளக்குகிறார்; நம் நாட்டு சிறு விவசாயிகள் அயல் நாட்டு விவசாயிகளை போன்றவர்கள் இல்லை, அவர்களால் பெரிய நிறுவனங்களை அணுகக்கூட முடியாது என்ற உண்மையை ஆணித்தரமாக எடுத்துரைக்கிறார். சில்லறை வர்த்தகத்தில் இதுவரை இருக்கும் பாரம்பரியமான சந்தைப்படுதலும், கலாச்சார நடைமுறைகளும் வால் மார்ட் போன்ற அந்நிய நிறுவனங்களால் எப்படி சிதையும் என்பதை விரிவாக எடுத்துரைக்கிறார் திரு.குருமூர்த்தி. அவ்வாறு சிதையும் அபாயத்தை நினைத்தாலே பிரதமர் மன்மோகன் சிங் மொழியில் சொன்னால் "கவலை தருகிறது".
திரு.சேகர் ஸ்வாமி அவர்கள் தி ஹிந்து பிசினஸ் லைனில் எழுதிய கட்டுரைத் தொகுப்பிலிருந்து சில பகுதிகள் இந்த புத்தகத்தில் வெளிவந்துள்ளது. விவரம் புரியாமல் வால்மார்ட் போன்ற நிறுவனங்களுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை இது. பெரும் நிறுவனங்கள் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டால் நுகர்வோர் உரிமை எவ்வாறெல்லாம் பாதிப்படையும் என்பதை அழகாக எடுத்துரைக்கிறார். நம் பாரத நாட்டை பொறுத்தவரை சில்லறை வர்த்தகத்தில் இடைத்தரகர் மூமாக ஈடுபடுவதே நுகர்வோருக்கு மட்டும் இல்லை, விவசாயிகளுக்கும் சிறந்தது என்பதை விளக்குகிறார். சில்லறை வர்த்தகத்துக்கு ஆதரவான அனைத்து கருத்துக்களுக்கும் நேர்மையாக பதில் அளித்துள்ளார். சில்லறை வர்த்தகம் பற்றி ஆதரவாகவோ, எதிர்ப்பாகவோ கருத்து கொண்டிருப்பவர்கள் அவசியம் படிக்க வேண்டிய விஷயங்கள் தரப்பட்டுள்ளன.
அட்டைப்படத்தில் சில்லறை வர்த்தகர்கள் இடம்பெற்றுள்ளது புத்தகத்தில் விறுவிறுப்பை கூட்டுகிறது. மத்திய அரசின் பொருளாதார ஆலோசகர்கள் இந்த புத்தகத்தை படித்து, மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி ஆகியோரின் செவிட்டு காதில் ஊளையிட்டால் நல்லது.
Wednesday, October 6, 2010
எனது பார்வையில் அயோத்தி தீர்ப்பு
ஒரு வழியாக அயோத்தி ராம ஜென்மபூமி - பாபர் மசூதி வழக்கு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பாகி விட்டது. மேலோட்டமாக பார்ப்பவர்கள், "யாரும் வெற்றியோ, தோல்வியோ அடைந்து விட முடியாத வகையில் தீர்ப்பு வந்து விட்டது. ஹிந்துக்களுக்கோ, முஸ்லீம்களுக்கோ யாருக்கும் முழுமையான வெற்றி கிடைத்து விடவில்லை. ஆனாலும் ஹிந்துக்களின் தரப்பு தீர்ப்பை வரவேற்க வேண்டும்" என்று பேசுகிறார்கள்.
ஆனால் உண்மையில், இது ஹிந்துக்களுக்கு ஏற்பட்ட மிகபெரிய தோல்வி என்பதில் சந்தேகம் இல்லை. உலகில் எந்த ஒரு மதத்துக்குமே, இதுபோன்று தங்களுடைய புனித இடத்தை பிரித்துக் கொண்டு அனுபவிக்கும் துர்பாக்கிய நிலைமை ஏற்பட்டதில்லை. ஆனால் அயோத்தியில் முஸ்லீம்களுக்கு மூன்றில் ஒரு பங்கை விலை கொடுத்து தான் ராமர் கோயில் கட்டும் தீர்ப்பை பெற வேண்டியுள்ளது.
பாரதத்தின் பல கோயில்களின் அருகில் மசூதிகளையோ, சர்ச்சுகளையோ அனுமதித்ததால் ஹிந்துக்கள் தினந்தோறும் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றார்கள். சபரிமலை ஐய்யப்பன் கோயில் இதற்கு ஒரு முக்கிய உதாரணம். ஆனால் அந்த கசப்புணர்வுகளை ராம ஜென்மபூமி விவகாரத்தில் சுலபமாக மறந்து விடவே ஹிந்துக்களின் தரப்பு விரும்புகிறது.
ஹிந்துக்களின் இந்த பரந்த மனப்பான்மையை பலவீனம் என்றோ, கோழைத்தனம் என்றோ நினைத்து விட்டால் நஷ்டம் முஸ்லீம்களுக்கு தான். இந்த நாட்டின் பெரும்பான்மை சமுதாயத்தின் நம்பிக்கையை இஸ்லாமிய சமுதாயம் இழக்க நேரிடும்.
ஹிந்துக்களின் கோயிலை இடித்தோ அல்லது கோயில் இடிப்பாடுகளின் மீதோ தான் மசூதி கட்டப்பட்டுள்ளது என்று தொல்பொருள் துறையின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. இதை நீதிமன்றமும் ஏற்றுள்ளது. 1949 - முதல் இந்த இடத்தில் ராமர் சிலை வைத்து வழிபாடு நடந்துள்ளது. இந்த இடத்தில் முஸ்லீம்கள் தொழுகை நடத்தியதற்கான ஆதாரம் இல்லை. இந்த சூழ்நிலையில் முஸ்லீம்களுக்கு இடம் அளிக்கப்பட்டது அதிகம்.
நீதிமன்றம் தனது தீர்ப்பில் கோடிக்கணக்கான ஹிந்துக்களின் நம்பிக்கையான 'அயோத்தியில் ராம பிரான் பிறந்தார்' என்பதை ஏற்றுள்ளது. இதை போலி மதசார்ப்பின்மைவாதிகளும், சில பத்திரிக்கைகளும் குறை கூறுகின்றார்கள். அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்?. நீதிமன்றம் ஹிந்துக்களின் நம்பிக்கையை அலட்சியம் செய்ய வேண்டும் என்றா? அப்படி செய்தால் நீதிமன்றம் இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை இழக்க நேரிடும். நல்ல வேலையாக நீதிமன்றம் ஹிந்துக்களின் நம்பிக்கைக்கு மதிப்பு அளித்துள்ளது.
தீர்ப்பு வருவதற்கு முன்னால் நீதிமன்ற தீர்ப்பை ஏற்போம் என்று தமிழக முதல்வர் மு.கருணாநிதி போன்றவர்கள் கூறினார்கள். ஆனால் தீர்ப்பு வந்தவுடன் "அகழ்வாராய்ச்சி ராஜராஜ சோழனுக்கு நடக்கவில்லையே?" என்று புலம்புகிறார் கருணாநிதி. தமிழகத்தை ஆண்டுக் கொண்டிருப்பது அவர் தானே? ராஜராஜ சோழனை பற்றிய அகழ்வாராச்சிக்கு உத்தரவிட்டிருக்கலாமே? யார் வேண்டாம் என்றார்கள்? ராஜராஜன் தமிழர்களின் நாயகன் என்றால் ராம பிரான் கோடிக்கணக்கான ஹிந்துக்களின் நாயகன் ஆவான். தமிழகத்தில் இருக்கும் ஹிந்துக்களுக்கும் ராமன் தான் நாயகன். ஒட்டுமொத்த தமிழர்களின் தலைவர் என்று தனக்குத்தானே பீற்றிக்கொள்ளும் கருணாநிதி அடுத்த ஜென்மத்திலாவது ராமனை உணர்வாராக.
ஆந்திர பிரதேசத்தின் மாநில காங்கிரஸ் செயலாளர் ஆனந்த் பாஸ்கர் என்பவர் பாபர் மசூதி கமிட்டி அமைப்பாளர் ஹஷீம் அன்சாரிக்கு 'பத்மபூஷண்' விருது தரவேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார். ஏனென்றால் ஹஷீம் அன்சாரி சமரச பேச்சுக்கு தயாராக இருக்கிறாராம். 60 வருடங்களாக இந்த ஞானோதயம் ஹஷீம் அன்சாரிக்கு வரவில்லை. இப்போது தோற்ற பிறகு வந்து விட்டதாம். காங்கிரஸ்காரர்கள் நமது தேசிய விருதுகளின் நற்பெயரை எந்த அளவுக்கு சீரழிக்க முடியுமோ அவ்வாறெல்லாம் சீரழிக்கிறார்கள். அவர்களை விட்டால் அப்சல் குருவுக்கும், கசாப்புக்கும் "பாரத ரத்னா" விருது தந்து விடுவார்கள்.
நீதிமன்ற தீர்ப்பு பாபர் மசூதி இடிப்பை நியாயப்படுத்தவில்லை என்று காங்கிரஸ் கட்சி பிதற்றுகிறது. ராமர் கோயில் பற்றிய சிவில் வழக்குக்கும், பாபர் மசூதி பற்றிய கிரிமினல் வழக்குக்கும் வித்தியாசம் தெரியாத மூடர்கள் நம் நாட்டை ஆளுவதை என்னவென்று சொல்வது?
தீர்ப்பு வரும் முன்பு இஸ்லாமிய அமைப்புகள் தாங்கள் அமைதி காப்பதாக செய்திகளை பரப்பின. ஆனால் தீர்ப்பு வெளிவந்த சிறிது நேரத்திலேயே தங்களது சுயரூபத்தைக் காட்ட துவங்கிவிட்டன. தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்களான தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம், தவ்ஹீத் ஜமாத் ஆகியவை 'நேரடி நடவடிக்கைக்கு தயாராகி வருவதாக மிரட்டுகின்றன. இது தேசத்தின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்காதா? ஒருவேளை தீர்ப்பு முஸ்லீம்களுக்கு முழுமையாக சாதகமாக வந்திருந்தால் ஹிந்து இயக்கங்களுக்கு பத்திரிக்கைகள் உபதேசம் தந்திருக்கும். இப்போது மட்டும் அவை வாய் மூடி மௌனியாக இருப்பது ஏன்? ஏன் இந்த பாராபட்சம்?
நீதிமன்றத்தை குறை கூறி எந்த பயனும் இல்லை. கடைசி நேரத்தில் தீர்ப்பு தர வேண்டிய கட்டாயம். எப்படியும் அப்பீல் செய்வார்கள் என்ற கண்ணோட்டத்தில் 3 மாதம் அவகாசமும் தந்துள்ளது.
இந்த நேரம் முஸ்லீம்கள் தாங்களும் பாரத தேசத்தின் நல்லிணக்கத்தை விரும்புபவர்கள் தான் என்பதை உணர வேண்டிய நேரம். ராமன் இந்த நாட்டின் உதாரண புருஷன். ராமன் பிறந்த இடத்தில் இல்லாமல் வேறெங்கு அவனுக்கு ஆலயம் அமைத்தாலும் ஒரு படி கீழே தான். இதை முஸ்லீம்கள் உணர்ந்து ராமர் ஆலயம் அமைய முழு ஆதரவு தர வேண்டும். ராமனுக்கு பலம் சேர்த்தால் தான் தேசம் பலம் பெற முடியும். ராம ஜென்மபூமி இல்லாமல் வேறெங்கு வேண்டுமானாலும் முஸ்லீம்கள் மசூதி கட்டி தொழுகை நடத்தலாம். பரந்த மனப்பாமை குணம் கொண்ட ஹிந்துக்கள் நிச்சயம் தடை சொல்ல மாட்டார்கள்.
மேலும், இந்த தேசத்தை அசல் வித்தாக கொண்டவர்கள் பாபரை ஆப்கானிஸ்தான் நாட்டின் கொள்ளைக்காரன் என்று தான் நினைக்கிறார்கள். முஸ்லீம்கள் தாங்கள் இந்த நாட்டை சேர்ந்தவர்களா அல்லது அயல்நாட்டவர்களா என்ற கேள்விக்கு அவர்கள் தரும் பதில் பாபர் என்ற பெயரையே புறக்கணிப்பதில் தான் உள்ளது. இஸ்லாமிய சட்டத்தின் படி அல்லாவின் பெயரில் தான் மசூதி கட்ட முடியுமே தவிர எந்த தனிமனிதன் பெயரிலாவது மசூதி அமைவதை அவர்கள் ஏற்பார்களா? இஸ்லாமிய அறிஞர்கள் விளக்கம் அளிப்பார்களா?
Thursday, February 25, 2010
விவசாயிகளின் நிலை
நம் நாட்டில் இன்னும் 65% மக்கள் விவசாயம், விவசாயம் சார்ந்த துறைகளை நம்பியே வாழ்கிறார்கள். அவர்களை புறக்கணித்து விட்டு 2020 - ல் இந்தியா எப்படி வல்லரசாக முடியும்? மாற்று திட்டம் தான் என்ன?.